Advertisement

சிறப்புச்செய்திகள்

நான் ஒரு சீரியல் டேட்டர் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‛ஓப்பனாக' பேசிய ரெஜினா | விஜய்யின் கடைசி படம்: நாளைதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி | 'வணங்கான்' படத் தலைப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | அடுத்தடுத்து விலையுர்ந்த சொகுசு கார்களை வாங்கிய அஜித் | மற்ற மொழித் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரும் ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த 'சாரதா' | சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி: சோகத்தில் ரசிகர்கள் | பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்-சிவகார்த்திகேயன்

26 ஆக, 2024 - 03:32 IST
எழுத்தின் அளவு:
Dhanush-Sivakarthikeyan-put-an-end-to-the-controversy

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ஒருவரை நான் தான் வளர்த்து விட்டேன் என்னால்தான் அவர் வளர்ந்தார் என யாரும் ஒருவர் வளர்ச்சியின் மீது முத்திரை குத்த முடியாது என்று சூரிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது பற்றி பேசினார். ஆனாலும் அவர் பேசியது நடிகர் தனுஷ் குறித்து தான் என்று சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியது.

காரணம் தனுஷ் தான், சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தான் தயாரித்த படங்களின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கமர்சியல் அந்தஸ்து கிடைப்பதற்கு காரணமாகவும் அமைந்தார். பல இடங்களில் சிவகார்த்திகேயனும் தனுஷ் பற்றி உயர்வாக பேசி வந்த நிலையில் அவர் இப்படி பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது. தான் ரொம்பவே வளர்ந்து விட்டதால் தனது வளர்ச்சிக்கு திறமை தான் காரணம் என்றும் மற்றவர்கள் அல்ல என்பது போன்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதுடன் இருவரும் அருகருகே நின்று அந்த நிகழ்ச்சியை கவனிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் மட்டும் தான் நடக்கிறதா? - பாலியல் புகார்கள் குறித்து டொவினோ தாமஸ் கருத்துமலையாளத்தில் மட்டும் தான் ... விஜய்யின் தி கோட் படத்தின் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுமா? விஜய்யின் தி கோட் படத்தின் அதிகாலை 4 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in