சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ஒருவரை நான் தான் வளர்த்து விட்டேன் என்னால்தான் அவர் வளர்ந்தார் என யாரும் ஒருவர் வளர்ச்சியின் மீது முத்திரை குத்த முடியாது என்று சூரிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது பற்றி பேசினார். ஆனாலும் அவர் பேசியது நடிகர் தனுஷ் குறித்து தான் என்று சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியது.
காரணம் தனுஷ் தான், சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தான் தயாரித்த படங்களின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கமர்சியல் அந்தஸ்து கிடைப்பதற்கு காரணமாகவும் அமைந்தார். பல இடங்களில் சிவகார்த்திகேயனும் தனுஷ் பற்றி உயர்வாக பேசி வந்த நிலையில் அவர் இப்படி பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது. தான் ரொம்பவே வளர்ந்து விட்டதால் தனது வளர்ச்சிக்கு திறமை தான் காரணம் என்றும் மற்றவர்கள் அல்ல என்பது போன்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதுடன் இருவரும் அருகருகே நின்று அந்த நிகழ்ச்சியை கவனிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.




