சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள திரையுலகில் பணிபுரியும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் வாய்ப்புகளுக்காக அனுசரித்துச் செல்ல பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான குழு இந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் பணியாற்றும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் பலரும், பிரபல இயக்குனர்கள் நட்சத்திரங்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அதே சமயம் பல நடிகர்கள் இந்த ஹேமா கமிஷன் அறிக்கையை வரவேற்றுள்ளதுடன் இதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் மலையாள திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் இப்படி தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவது குறித்து கூறும்போது, “ஏதோ மலையாள திரையுலகில் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகள் இருப்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஒரு ஹேமா கமிஷன் குழுவினர் இதுபோன்று ஒரு விசாரணையை மலையாள திரையுலகில் மட்டுமே முன்னெடுத்து துவக்கி உள்ளனர். இதை போன்று மற்ற திரையுலகங்களிலும் விசாரணை நடத்தினால்தான் அங்கு இருக்கும் இது போன்ற பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வரும்” என்று கூறியுள்ள அவர், இது போன்ற குற்றங்களை யார் செய்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சினிமாவில் மட்டுமல்ல பெண்கள் தாங்கள் பணியாற்றும் எந்த ஒரு இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.