ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியரின் நடிப்பில் தற்போது புட்டேஜ் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகை ஷீத்தல் தம்பி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது தனக்கு பலமாக அடிபட்டதாகவும் இதனால் தற்போது வரை தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல், மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் ஷீத்தல் தம்பி.
மேலும் இந்த காட்சிகளை படமாக்கும்போது முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இன்றி படமாக்கியதால் தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் இதுவரை தயாரிப்பு தரப்பிலிருந்து தனக்கு சிகிச்சைக்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஷீத்தல் தம்பி. நடிகை மஞ்சு வாரியரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.