பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியரின் நடிப்பில் தற்போது புட்டேஜ் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகை ஷீத்தல் தம்பி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது தனக்கு பலமாக அடிபட்டதாகவும் இதனால் தற்போது வரை தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல், மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் ஷீத்தல் தம்பி.
மேலும் இந்த காட்சிகளை படமாக்கும்போது முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இன்றி படமாக்கியதால் தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் இதுவரை தயாரிப்பு தரப்பிலிருந்து தனக்கு சிகிச்சைக்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஷீத்தல் தம்பி. நடிகை மஞ்சு வாரியரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.