ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
திரையலகில் ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது எப்போதாவது நடக்கும் ஒரு ஆச்சரிய நிகழ்வு. கடந்த வருடம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானபோது மலையாளத்திலும் நடிகர் தியான் சீனிவாசன் நடிப்பில் இதே பெயரில் ஜெயிலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படம் உருவாகி, ஜெயிலர் வெளியான சில நாட்கள் கழித்து வெளியானது.
இந்தநிலையில் மலையாளத்தில் கடந்த வாரம் வாழ என்கிற படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது தமிழிலும் அதேபோல தமிழிலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மலையாளத்தில் வாழ திரைப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான விபின் தாஸ். இவர்தான் ஹிட் படங்களான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பல நடையில் ஆகிய படங்களை இயக்கியவர்.
ஒரு தயாரிப்பாளராக மாறி சவின் என்கிற இயக்குனரை அறிமுகப்படுத்தி இவர் வாழ படத்தை தயாரித்திருந்தார். விடலை பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்குமான புரிதல் குறித்து இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார் விபின் தாஸ்.