இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
திரையலகில் ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது எப்போதாவது நடக்கும் ஒரு ஆச்சரிய நிகழ்வு. கடந்த வருடம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானபோது மலையாளத்திலும் நடிகர் தியான் சீனிவாசன் நடிப்பில் இதே பெயரில் ஜெயிலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படம் உருவாகி, ஜெயிலர் வெளியான சில நாட்கள் கழித்து வெளியானது.
இந்தநிலையில் மலையாளத்தில் கடந்த வாரம் வாழ என்கிற படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது தமிழிலும் அதேபோல தமிழிலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மலையாளத்தில் வாழ திரைப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான விபின் தாஸ். இவர்தான் ஹிட் படங்களான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பல நடையில் ஆகிய படங்களை இயக்கியவர்.
ஒரு தயாரிப்பாளராக மாறி சவின் என்கிற இயக்குனரை அறிமுகப்படுத்தி இவர் வாழ படத்தை தயாரித்திருந்தார். விடலை பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்குமான புரிதல் குறித்து இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார் விபின் தாஸ்.