மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
திரையலகில் ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது எப்போதாவது நடக்கும் ஒரு ஆச்சரிய நிகழ்வு. கடந்த வருடம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானபோது மலையாளத்திலும் நடிகர் தியான் சீனிவாசன் நடிப்பில் இதே பெயரில் ஜெயிலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படம் உருவாகி, ஜெயிலர் வெளியான சில நாட்கள் கழித்து வெளியானது.
இந்தநிலையில் மலையாளத்தில் கடந்த வாரம் வாழ என்கிற படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது தமிழிலும் அதேபோல தமிழிலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மலையாளத்தில் வாழ திரைப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல இயக்குனருமான விபின் தாஸ். இவர்தான் ஹிட் படங்களான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பல நடையில் ஆகிய படங்களை இயக்கியவர்.
ஒரு தயாரிப்பாளராக மாறி சவின் என்கிற இயக்குனரை அறிமுகப்படுத்தி இவர் வாழ படத்தை தயாரித்திருந்தார். விடலை பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்குமான புரிதல் குறித்து இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார் விபின் தாஸ்.