சட்டப்படி வாங்கிய கார்களை திருப்பித்தர வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் துல்கர் மனு | இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி | முதல் நாள் வசூல் : இந்திய அளவில் டாப் 10ல் தென்னிந்தியப் படங்கள் | மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் நடித்து வெளியான படம் 'வாழை'. ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வந்தது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 40 கோடி வரை வசூலித்திருக்கிறது. இந்நிலையில் வாழை படத்தின் 25வது நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
அப்போது மாரி செல்வராஜ் பேசும்போது, ''என்னைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாழை படத்தை எடுத்தேன். அடுத்து வாழை இரண்டாவது பாகம் மட்டுமின்றி பல பாகங்களை எடுப்பேன். குறிப்பாக வாழை படத்தின் சிவநந்தன் என்ற வேடத்தில் நடித்த பொன்வேல் கேரக்டர் இரண்டாம் பாகத்திலும் தொடரும்,'' என்கிறார் மாரி செல்வராஜ்.
மேலும் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதையடுத்து வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.