தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கியிலிருந்து சில குறிப்பிட்ட தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்,' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் மரியாதை
இன்று ஈ.வெ.ரா.,வின் பிறந்தநாள் என்பதால் அவரது நினைவிடம் சென்றும் விஜய் மரியாதை செலுத்தினார். அரசியல் களத்தில் இறங்கியதாக அறிவித்த நாள் முதல், நடிகர் விஜய் சமூக வலைதளத்தில் மட்டுமே தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் இன்று எழும்பூரில் உள்ள ஈவெரா நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி துவங்கிய பின் பொதுவெளியில் மரியாதை செலுத்துவது இதுவே முதன்முறை.
ரஜினி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.