சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கியிலிருந்து சில குறிப்பிட்ட தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்,' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் மரியாதை
இன்று ஈ.வெ.ரா.,வின் பிறந்தநாள் என்பதால் அவரது நினைவிடம் சென்றும் விஜய் மரியாதை செலுத்தினார். அரசியல் களத்தில் இறங்கியதாக அறிவித்த நாள் முதல், நடிகர் விஜய் சமூக வலைதளத்தில் மட்டுமே தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் இன்று எழும்பூரில் உள்ள ஈவெரா நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி துவங்கிய பின் பொதுவெளியில் மரியாதை செலுத்துவது இதுவே முதன்முறை.
ரஜினி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.