25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியரின் நடிப்பில் தற்போது புட்டேஜ் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகை ஷீத்தல் தம்பி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது தனக்கு பலமாக அடிபட்டதாகவும் இதனால் தற்போது வரை தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல், மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் ஷீத்தல் தம்பி.
மேலும் இந்த காட்சிகளை படமாக்கும்போது முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இன்றி படமாக்கியதால் தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் இதுவரை தயாரிப்பு தரப்பிலிருந்து தனக்கு சிகிச்சைக்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஷீத்தல் தம்பி. நடிகை மஞ்சு வாரியரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.