மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கடந்த மாதம் 23ம் தேதி வெளியான படம் 'வாழை'. இப்படத்தை மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கி இருந்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தில் பொன்வேல், ராகுல் ஆகிய சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களுடன் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இது மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கை கதையாக வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட 7 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக சமீபத்தில் மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார்.




