‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலா இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமண நிச்சயம் நடந்தது. நாகார்ஜூனா அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்குப் பின் நேற்று நாக சைதன்யா, சோபிதா இருவரும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'குறுந்தொகை' பாடல் ஒன்றின் எளிமையான ஆங்கில மொழியாக்கத்தைப் பதிவிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.
“எனது அம்மா உனக்கு என்னவாக இருக்க முடியும்?, எனது தந்தை உனக்கு என்ன உறவினர்?, நீயும் நானும் எப்படி சந்தித்தோம்? ஆனால், காதலில் எங்கள் இதயங்கள் செம்மண் பூமி மற்றும் மழைநீர் போல் இணைந்துவிட்டன” என்று பதிவிட்டுள்ளனர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
என்பது அந்த பாடல்... இதன் அர்த்தம்...
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர்?
நானும் நீயும் எப்படி அறிந்தோம்?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.
வேறு மொழி இலக்கிய மேற்கோள்கள், வெளிநாடுகளில் யாரோ சொன்ன மேற்கோள்களைப் பதிவிடுபவர்களுக்கு மத்தியில் 'குறுந்தொகை' பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளனர் நாகசைதன்யா, சோபிதா.