'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

விஜயகுமாரின் கலை குடும்பத்து வாரிசுகளில் ஒருவர்தான் சிந்து. அதாவது விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவின் சகோதரி மகள். 1990-ஆம் ஆண்டு வெளிவந்த 'இணைந்த கைகள்' என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி என்ற படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பரம்பரை, ஊர்க் குருவி, நம்ம வீட்டு கல்யாணம், அன்பே அன்பே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் வாய்ப்புக் குறையத் தொடங்கியதும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். கோகுலம் வீடு, எங்கள் குடும்பம், தோழிகள், ஆனந்தம், மெட்டி ஒலி, ஆகிய தொடர்கள் அவர் நடித்ததில் முக்கியமானவை. 1995ம் ஆண்டு கன்னட நடிகர் ரகுவீர் என்பவரைத் திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஸ்ரேயா என்ற ஒரு மகள் உள்ளார்.
2005ம் ஆண்டு சுனாமி நிதி திரட்டும் ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர், நடிகையர்களுடன் கலந்து கொண்டார். வெகு தூரம் ஊர்வலமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போது அவருக்கு வயது 33.
மக்களுக்கான பணியின்போது உயிரை பறிகொடுத்த சிந்துவின் தியாகம் பற்றி யாருமே கண்டுகொள்ளாததுதான் மிகப்பெரிய சோகம்.