'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நிலவிய லஞ்ச ஊழல்களை சுட்டிக்காட்டி அவற்றுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கடந்த 28 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான படம் இந்தியன். இத்தனை வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்கிற பெயரில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படத்தில் தமிழகத்தின் அரசியல் மற்றும் அரசாங்க நிர்வாகங்களை பட்டும் படாமல் தொட்டு விட்டு பிற மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை மட்டுமே பெரிய அளவில் காட்டினார்கள்.
அதேசமயம் போகிற போக்கில் யாரை தொட்டால் பிரச்சனை இருக்காதோ அவர்களை எல்லாம் இந்தியன்-2 படத்தில் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அதில் தமிழகமெங்கும் தற்போது அரசாங்க அலுவலகத்திற்கு மக்கள் அலைய தேவை இல்லாமல் தங்களது ஊரிலேயே அரசின் அடையாள அட்டைகளையும் அரசின் நலத்திட்டங்களையும் பெறுவதற்காக இயங்கி வரும் இ சேவை அமைப்புகளை பற்றி இந்த படத்தில் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் சேவைக்காக அல்லாமல் அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு மக்களை அலைக்கழிக்கிறார்கள் என்கிற விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் இந்த இ சேவை மைய சங்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் மீது தப்பான அபிப்பிராயம் ஏற்படும் விதமாக தங்களை தவறாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் இதைவிட வெளிச்சம் போட்டு தோலுரித்து காட்ட வேண்டிய பல விஷயங்களை தொடாமல் தேவையில்லாமல் மக்கள் சேவை செய்து வரும் தங்களை செய்துள்ளார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.




