போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதற்காக வருகை தந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நுழைவதற்கு முன்பாக ஆண்கள் தங்களது மேலாடையை கழட்டி விட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
அப்படி ஏ.ஆர்.முருகதாஸ் தனது சட்டையை கழட்டும் போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஆர்வம் மிகுதியால் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். இதனால் சங்கடமாக உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அந்த ரசிகரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வீடியோ எடுக்க துவங்க உடன் வந்த தனது உதவியாளர்களிடம் அதை கவனித்து தடுக்குமாறு கூறினார்.
ஆனாலும் அந்த ரசிகர் முருகதாஸின் உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் பலரது கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பலரும் ஏ.ஆர் முருகதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருவதுடன், பிரபலங்களின் பிரைவசியில் எந்நேரமும் தலையிட்டு கொண்டிருக்கக் கூடாது என அந்த வீடியோ எடுத்த சம்பந்தப்பட்ட ரசிகரையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.