பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தாலும் யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சிம்பு தேவன் இயக்கத்தில் அவர் கதை நாயகனாக நடித்துள்ள 'போட்' படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் கதை நாயகனாக நடிக்கும்படம் 'கான்ஸ்டபிள் நந்தன்'. இந்த படத்தின் பணிகள் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
யோகிபாபு ஏற்கனவே பல படங்களில் கான்ஸ்டபிளாக நடித்திருந்தபோதும் கதை நாயகனாக நடிப்பது இதுவே முதல்முறை. படத்தை சங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர், என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி. பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகிபாபு போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகிபாபுவுக்கு எதிராக ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.