நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நேற்று நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் எம்.பி.,யாக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் அமைச்சராக பணியாற்றுவேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.
எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன். பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும்.
சபரிமலையில் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு முறையான தரிசன ஏற்பாடுகள் செய்யவில்லை. சபரிமலையை யாரும் தொட முடியாது. தொட்டவர்கள் எங்கோ காணாமல் போய்விட்டார்கள். என்றார்.
விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சுரேஷ் கோபி. அத்துடன் சத்தியம் தியேட்டரில் அவரது மகன் கோகுல் சுரேஷ் நடித்த 'ககனாச்சாரி' படத்தை பார்த்து ரசித்தார்.