இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை ஜூலை 5 முதல் ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு சுமார் பத்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. அதன்பிறகு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.
இந்த 'கூலி' படத்தில் நடிப்பதற்காகவே 'வேட்டையன்' படத்தில் தான் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்கச் சொன்னார் ரஜினிகாந்த். அதன்பின் அபுதாபி, இமயமலை என சில வாரங்கள் ஓய்வில் இருந்தார். பின் 'கூலி' படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிலும் அவர் கலந்து கொண்டார்.
'கூலி' படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாக உள்ளது. இப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரஜினி, சத்யராஜ் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசன், பஹத் பாசில், ஷோபனா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
வரும் வாரங்களில் இப்படத்தின் மேலும் சில அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.