8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… |

மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி புகைப்பட ஆர்வலர் எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை எடுத்துச் செல்வது வழக்கம். தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் கேரளாவில் பறவைகள் நிபுணரான கே.கே.நீலகண்டன் நூற்றாண்டு விழாவையொட்டி எர்ணாகுளத்தில் நடந்த கண்காட்சியில் பல்வேறு அரிய பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. அதில் மம்முட்டி எடுத்த 'புல் புல்' என்ற சிறிய பறவை ஒன்றின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. ஒரு சிறிய இலையின் விழிம்பில் 'புல் புல்' அமர்ந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
பின்னர் இந்த படம் ஏலம் விடப்பட்டது. இதனை தொழில் அதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் 3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகை ஒரு பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை தான் கட்டிவரும் 3 நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு கூடத்தில் பெரிதாக வைக்கப்போவதாக அச்சு உல்லட்டில் தெரிவித்தார்.