எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி புகைப்பட ஆர்வலர் எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை எடுத்துச் செல்வது வழக்கம். தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் கேரளாவில் பறவைகள் நிபுணரான கே.கே.நீலகண்டன் நூற்றாண்டு விழாவையொட்டி எர்ணாகுளத்தில் நடந்த கண்காட்சியில் பல்வேறு அரிய பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. அதில் மம்முட்டி எடுத்த 'புல் புல்' என்ற சிறிய பறவை ஒன்றின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. ஒரு சிறிய இலையின் விழிம்பில் 'புல் புல்' அமர்ந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
பின்னர் இந்த படம் ஏலம் விடப்பட்டது. இதனை தொழில் அதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் 3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகை ஒரு பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை தான் கட்டிவரும் 3 நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு கூடத்தில் பெரிதாக வைக்கப்போவதாக அச்சு உல்லட்டில் தெரிவித்தார்.