சரண்யா துராடிக்கு காலில் காயம் | இது டிம்பிள் வீடு : சூட்டிங் வீட்டின் நினைவுகளை பகிரும் நீலிமா | டாக்டர் காதலியுடன் ஆஷிஷ் சக்கரவர்த்தி : விரைவில் திருமணமாம் | ஏர்போர்ட்டில் அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த அவமானம் | எந்த மதத்தையும் சாராத பேய் கதை | ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் சுரேஷ்கோபி மகனின் படம் | சீரியல் நடிகையை காதலித்து கரம்பிடித்த வீஜே அஷ்வத் | அனிதா சம்பத்தை ஏமாற்றிய ஆன்லைன் நிறுவனம் | 'ஈகை'யில் சட்ட மாணவி சந்திக்கும் பிரச்னைகள் | ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது : சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுகிறது |
மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி புகைப்பட ஆர்வலர் எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை எடுத்துச் செல்வது வழக்கம். தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் கேரளாவில் பறவைகள் நிபுணரான கே.கே.நீலகண்டன் நூற்றாண்டு விழாவையொட்டி எர்ணாகுளத்தில் நடந்த கண்காட்சியில் பல்வேறு அரிய பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. அதில் மம்முட்டி எடுத்த 'புல் புல்' என்ற சிறிய பறவை ஒன்றின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. ஒரு சிறிய இலையின் விழிம்பில் 'புல் புல்' அமர்ந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
பின்னர் இந்த படம் ஏலம் விடப்பட்டது. இதனை தொழில் அதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் 3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகை ஒரு பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை தான் கட்டிவரும் 3 நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு கூடத்தில் பெரிதாக வைக்கப்போவதாக அச்சு உல்லட்டில் தெரிவித்தார்.