ஆகஸ்ட்டில் வெளியாகும் 'டிமான்டி காலனி 2' | 'சட்னி - சாம்பார்' சீரிஸின் டீசர் வெளியானது : விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு | தாய்மொழியில் பேசிய ராஷ்மிகா : குழம்பிப்போன ரசிகர்கள் | திலீப்பின் மூன்று படங்களையும் கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பண மோசடி சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎக்ஸ் தயாரிப்பாளர் | புதிய வீட்டில் குடியேறிய நயன்தாரா | 'இந்தியன் 2'வில் ரஜினி குறித்து விமர்சனமா? - கமல் பதில் | வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மெஹ்ரின் | சல்மான்கானை கொல்ல சிறையில் நடந்த சதி: குற்றப்பத்திரிகையில் தகவல் | நிகிலுடன் இணைந்த சாயி மஞ்ரேக்கர் |
சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது அவர்களின் குரலை ஒலிக்க வைப்பது என ஏஐ என்ற தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தில் மறைந்த பாடல்கள் பம்பாய் பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருந்தார்கள்.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள். லால் சலாம், கோட் படங்களுக்கு பணியாற்றிய அதே கிருஷ்ண சேத்தன் என்பவர்தான் இந்தியன் 2 படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா ஆகிய இருவரின் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறாராம்.