இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' |

சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது அவர்களின் குரலை ஒலிக்க வைப்பது என ஏஐ என்ற தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தில் மறைந்த பாடல்கள் பம்பாய் பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருந்தார்கள்.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள். லால் சலாம், கோட் படங்களுக்கு பணியாற்றிய அதே கிருஷ்ண சேத்தன் என்பவர்தான் இந்தியன் 2 படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா ஆகிய இருவரின் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறாராம்.