காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது அவர்களின் குரலை ஒலிக்க வைப்பது என ஏஐ என்ற தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தில் மறைந்த பாடல்கள் பம்பாய் பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருந்தார்கள்.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள். லால் சலாம், கோட் படங்களுக்கு பணியாற்றிய அதே கிருஷ்ண சேத்தன் என்பவர்தான் இந்தியன் 2 படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா ஆகிய இருவரின் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறாராம்.