காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ரசிகர் ஒருவரைக் கடத்தி வந்து கொலை செய்த குற்றத்திற்காக கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றக் காவலுக்குப் பிறகு பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார். இதுவரையில் அவரை சந்திக்காமல் இருந்த குடும்பத்தினர் நேற்று சிறைக்குச் சென்று தர்ஷனை சந்தித்துள்ளனர்.
தர்ஷன் அம்மா மீனா, சகோதரர் தினகர், மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் நேற்று காலையில் சிறையில் தர்ஷனை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குடும்பத்தினரிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனராம்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி என்ற தர்ஷனின் ரசிகர், தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். அதனால், வந்த ஆத்திரத்தில்தான் தர்ஷன் ஆட்களை வைத்து அவரைக் கொன்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகா சுவாமியின் மனைவி அவரது முதல் குழந்தையை விரைவில் பெற்றெடுக்க உள்ளார்.
ஜூலை 4 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் தர்ஷன். இந்த கொலை விவகாரம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.