'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர், நேரம் கிடைக்கும்போது அடுத்தடுத்த படத்திற்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.
ஏற்கனவே ‛இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதனை டிரீம் வாரியர், அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சூர்யா, ரவிக்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.