நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர், நேரம் கிடைக்கும்போது அடுத்தடுத்த படத்திற்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.
ஏற்கனவே ‛இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதனை டிரீம் வாரியர், அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சூர்யா, ரவிக்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.