ஆகஸ்ட்டில் வெளியாகும் 'டிமான்டி காலனி 2' | 'சட்னி - சாம்பார்' சீரிஸின் டீசர் வெளியானது : விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு | தாய்மொழியில் பேசிய ராஷ்மிகா : குழம்பிப்போன ரசிகர்கள் | திலீப்பின் மூன்று படங்களையும் கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பண மோசடி சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎக்ஸ் தயாரிப்பாளர் | புதிய வீட்டில் குடியேறிய நயன்தாரா | 'இந்தியன் 2'வில் ரஜினி குறித்து விமர்சனமா? - கமல் பதில் | வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மெஹ்ரின் | சல்மான்கானை கொல்ல சிறையில் நடந்த சதி: குற்றப்பத்திரிகையில் தகவல் | நிகிலுடன் இணைந்த சாயி மஞ்ரேக்கர் |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர், நேரம் கிடைக்கும்போது அடுத்தடுத்த படத்திற்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.
ஏற்கனவே ‛இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதனை டிரீம் வாரியர், அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சூர்யா, ரவிக்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.