தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் | ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம் | 100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45 |

‛குரங்கு பொம்மை' படம் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மற்றும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வசூலும் ரூ.80 கோடியை தாண்டி உள்ளது. ரூ.100 கோடி கிளப்பிலும் இணைய வாய்ப்பு உள்ளது.
மகாராஜா படத்தை தொடர்ந்து நித்திலன் அடுத்து நயன்தாரா உடன் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.