என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

விடுதலை, கருடன் படங்களுக்கு பிறகு சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை என்றாலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறார் சிவகார்த்திகேயன். 
ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற இந்த படம் தற்போது மேலும் ஒரு விருதினை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் “டிரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் எங்களது 'கொட்டுக்காளிக் திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெவித்துள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            