கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வருகிற 23ம் தேதி திரைக்கு வரும் படம் கொட்டுக்காளி. வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. கிராமத்து கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பது போலவும், அதற்கு சிகிச்சை கொடுப்பதற்காக வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த டிரைலரின் முதல் காட்சியில் ஒரு சேவலை கயிற்றால் கல்லில் கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள். அதை சோகத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் படத்தின் நாயகி அன்னா பென். இந்த சேவலுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாயகனாக நடித்த இரண்டு படங்களில் இருந்து இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.