செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! | ரூ.100 கோடி வசூலித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' |
பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் ‛கொட்டுக்காளி'. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் வென்ற இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக., 23ல் படம் ரிலீஸாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது : இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட விழாவில் தான் வினோத் ராஜை சந்தித்தேன். இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என கேட்டேன். அவன் யாருமே கிடையாது என்றான். என்ன இவன் பெரிய ஆள் போல பேசுகிறான் என தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்த்த பின் வினோத் என்னை செருப்பை கழற்றி அடித்திருக்கிறான் என தெரிகிறது.
சமீபத்தில் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று வாழை. அதை பார்த்த பின் ஒருவாரம் தூக்கமே வரவில்லை. மற்றொன்று கொட்டுக்காளி. இந்த படத்தை பார்த்த பின் எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்துவிட்டது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. இதை மக்கள் வந்து பார்க்க நான் நிர்வாணமாக கூட ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். காரணம் சினிமா பார்க்க வருவதே நிர்வாணமாக ஆடுவதை பார்க்கத்தானே. இன்றைக்கு 16 வயதினிலே மாதிரியான படங்கள் எடுத்தால் பார்ப்பார்களா என தெரியவில்லை. இந்த படம் என் தாயின் கருவறை, என் மகளின் யோனி. வினோத்தின் காலை நான் தொட்டு முத்தமிடும் அளவுக்கு இந்த படத்தை அவன் எடுத்திருக்கிறான். இளையராஜாவிற்கு பின் வினோத் காலை நான் முத்தமிடுவேன்'' என்றார்.