‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் ‛கொட்டுக்காளி'. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் வென்ற இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக., 23ல் படம் ரிலீஸாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது : இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட விழாவில் தான் வினோத் ராஜை சந்தித்தேன். இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என கேட்டேன். அவன் யாருமே கிடையாது என்றான். என்ன இவன் பெரிய ஆள் போல பேசுகிறான் என தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்த்த பின் வினோத் என்னை செருப்பை கழற்றி அடித்திருக்கிறான் என தெரிகிறது.
சமீபத்தில் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று வாழை. அதை பார்த்த பின் ஒருவாரம் தூக்கமே வரவில்லை. மற்றொன்று கொட்டுக்காளி. இந்த படத்தை பார்த்த பின் எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்துவிட்டது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. இதை மக்கள் வந்து பார்க்க நான் நிர்வாணமாக கூட ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். காரணம் சினிமா பார்க்க வருவதே நிர்வாணமாக ஆடுவதை பார்க்கத்தானே. இன்றைக்கு 16 வயதினிலே மாதிரியான படங்கள் எடுத்தால் பார்ப்பார்களா என தெரியவில்லை. இந்த படம் என் தாயின் கருவறை, என் மகளின் யோனி. வினோத்தின் காலை நான் தொட்டு முத்தமிடும் அளவுக்கு இந்த படத்தை அவன் எடுத்திருக்கிறான். இளையராஜாவிற்கு பின் வினோத் காலை நான் முத்தமிடுவேன்'' என்றார்.