ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது படம் மகாராஜா. சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்தைப் பார்த்த நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் நித்திலனை அழைத்து பாராட்டினார்கள். இந்த நிலையில் அடுத்தபடியாக மகாராஜா படத்தை தயாரித்த அதே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் நித்திலன். மகாராணி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.