'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவேற்பையும், வெற்றியும் பெற்றுள்ள நிலையில் அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகை அன்னா பென் இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் ஹெலன் ஆகிய படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது கொட்டுக்காளி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, பஹத் பாசில் நடித்து தயாரித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமாகி நடித்தது மிகப்பெரிய அனுபவம். அந்த படத்தின் வெற்றியால் மிகவும் உற்சாகமாக இருந்த பஹத் பாசில் என்னையும் மற்றும் அந்த படத்தில் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோரையும் அழைத்து, “முதல் படம் உங்களை தானாகவே தேடி வந்து அழைத்துக் கொள்ளும். ஆனால் உங்களது அடுத்தடுத்த படங்களை நீங்கள் தான் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்” என கூறினார். அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் எனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.