சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவேற்பையும், வெற்றியும் பெற்றுள்ள நிலையில் அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகை அன்னா பென் இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் ஹெலன் ஆகிய படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது கொட்டுக்காளி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, பஹத் பாசில் நடித்து தயாரித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமாகி நடித்தது மிகப்பெரிய அனுபவம். அந்த படத்தின் வெற்றியால் மிகவும் உற்சாகமாக இருந்த பஹத் பாசில் என்னையும் மற்றும் அந்த படத்தில் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோரையும் அழைத்து, “முதல் படம் உங்களை தானாகவே தேடி வந்து அழைத்துக் கொள்ளும். ஆனால் உங்களது அடுத்தடுத்த படங்களை நீங்கள் தான் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்” என கூறினார். அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் எனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.