'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெறவும், விருதுநகர் லோக்சபா வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம் செய்தார்.
தமிழகத்தில் மார்ச் 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மேலும் பா.ஜ., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா போட்டியிடுவதை ஒட்டி அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து சூறாவளி பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை(ஜூன் 4) லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் பல்வேறு மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பா.ஜ., பிரமுகர், நடிகருமான சரத்குமார் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும் என விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவர் கணவர் நடிகர் சரத்குமார் இருவரும் இணைந்து ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சரத்குமார், ராதிகா இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.