'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
சமுத்திரகனி தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தென்காசி பகுதியில் நடந்து வருகிறது. இதற்கிடையில் அவர் தனியார் ஓட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசியதாவது: மலையாள படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். மலையாள படத்தில் நடித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் நடிக்கிறேன். இதில் நான் மட்டுமே தெரிந்த முகம் மற்றவர்கள் புதியவர்கள். படத்தின் இயக்குனரின் தந்தை ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கிறார்.
தொடர்ந்து படம் நடிப்பதால் இயக்குவதை கைவிடவில்லை. ஆண்டுக்கு ஒரு படம் கட்டாயம் இயக்குவேன். 'விநோதயசித்தம்' படத்திற்கு பிறகு தெலுங்கு படம் இயக்கினேன். அடுத்து தமிழ் படம் இயக்க இருக்கிறேன். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும். அது குறித்தான பணிகள் நடைபெற்று வருகிறது.
திரையுலகில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது மாதிரி. இதுபோன்ற ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை கடந்து செல்ல வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது குறைந்து வருவது உண்மைதான். குறிப்பாக கிராமப்புறங்களில் சினிமாவின் முதல் காட்சிக்கான வரவேற்பு குறைந்துள்ளது. இது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.