பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
சமுத்திரகனி தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தென்காசி பகுதியில் நடந்து வருகிறது. இதற்கிடையில் அவர் தனியார் ஓட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசியதாவது: மலையாள படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். மலையாள படத்தில் நடித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் நடிக்கிறேன். இதில் நான் மட்டுமே தெரிந்த முகம் மற்றவர்கள் புதியவர்கள். படத்தின் இயக்குனரின் தந்தை ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கிறார்.
தொடர்ந்து படம் நடிப்பதால் இயக்குவதை கைவிடவில்லை. ஆண்டுக்கு ஒரு படம் கட்டாயம் இயக்குவேன். 'விநோதயசித்தம்' படத்திற்கு பிறகு தெலுங்கு படம் இயக்கினேன். அடுத்து தமிழ் படம் இயக்க இருக்கிறேன். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும். அது குறித்தான பணிகள் நடைபெற்று வருகிறது.
திரையுலகில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள். அது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது மாதிரி. இதுபோன்ற ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை கடந்து செல்ல வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது குறைந்து வருவது உண்மைதான். குறிப்பாக கிராமப்புறங்களில் சினிமாவின் முதல் காட்சிக்கான வரவேற்பு குறைந்துள்ளது. இது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.