காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோ. அஞ்சலி, நேஹா ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் என்.டி.பாலகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது குரூப் போட்டோ எடுப்பதற்காக மேடை ஏறிய பாலகிருஷ்ணா அஞ்சலி, நேகா ஷெட்டி இருவரையும் போட்டோவுக்கு சரியாக நிற்கும்படி கூறி அவரே அவர்களை நிற்க வைத்தார். அஞ்சலி அதனை கவனிக்காமல் தனது சேலையை சரிசெய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பாலகிருஷ்ணா அஞ்சலியின் தோளை பிடித்து தள்ளினார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பொது மேடைகளில் இந்த மாதிரி நடந்து கொள்வது என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படியே செய்திருக்கிறார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது சும்மா விளையாட்டுக்கு செய்தது என்று பாலகிருஷ்ணா தரப்பு கூறி வருகிறது.