சந்தானத்திற்கு ஜோடி மீனாட்சி சவுத்ரி | தீபாவளியை குறிவைக்கும் தக் லைப் படக்குழு | ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படத்தின் புதிய அப்டேட் | பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? | 2050ல் நடக்கும் கதையா 'தி கோட்'? | 50வது நாளில் 'அரண்மனை 4' | விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இபிஎஸ், கமல் | நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம் : சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி | விஜய் 69 - தெலுங்கு தயாரிப்பாளர் தான் என்பது உறுதி | ராம்சரணின் புதிய படம் குறித்து அப்டேட் தகவல்களை கொடுத்த விஜய்சேதுபதி |
அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோ. அஞ்சலி, நேஹா ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் என்.டி.பாலகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது குரூப் போட்டோ எடுப்பதற்காக மேடை ஏறிய பாலகிருஷ்ணா அஞ்சலி, நேகா ஷெட்டி இருவரையும் போட்டோவுக்கு சரியாக நிற்கும்படி கூறி அவரே அவர்களை நிற்க வைத்தார். அஞ்சலி அதனை கவனிக்காமல் தனது சேலையை சரிசெய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பாலகிருஷ்ணா அஞ்சலியின் தோளை பிடித்து தள்ளினார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பொது மேடைகளில் இந்த மாதிரி நடந்து கொள்வது என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படியே செய்திருக்கிறார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது சும்மா விளையாட்டுக்கு செய்தது என்று பாலகிருஷ்ணா தரப்பு கூறி வருகிறது.