ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோ. அஞ்சலி, நேஹா ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் என்.டி.பாலகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது குரூப் போட்டோ எடுப்பதற்காக மேடை ஏறிய பாலகிருஷ்ணா அஞ்சலி, நேகா ஷெட்டி இருவரையும் போட்டோவுக்கு சரியாக நிற்கும்படி கூறி அவரே அவர்களை நிற்க வைத்தார். அஞ்சலி அதனை கவனிக்காமல் தனது சேலையை சரிசெய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த பாலகிருஷ்ணா அஞ்சலியின் தோளை பிடித்து தள்ளினார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பொது மேடைகளில் இந்த மாதிரி நடந்து கொள்வது என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படியே செய்திருக்கிறார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது சும்மா விளையாட்டுக்கு செய்தது என்று பாலகிருஷ்ணா தரப்பு கூறி வருகிறது.