இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

பெரும்பாலான மலையாள நடிகர்கள் ஒரு கட்டத்தில் இயக்குனராகி விடுவார்கள். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இவர் ஜோசப், பட்டாளம், தட்டயன் மறையத்து, ஹோட்டல் கலிபோர்னியா, புலிமடா, நேரம், ரெட்ட உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 'ஜெகமே தந்திரம்' படம் முலம் தமிழில் அறிமுகமான இவர், 'புத்தம் புது காலை விடியாதா' படத்திலும் நடித்துள்ளார். தற்போது கமலின் 'தக்ஸ் லைப்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் ஆகிறார் ஜோஜூ ஜார்ஜ். அவர் இயக்கும் முதல் படத்திற்கு 'பனி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. அபிநயா, சாகர் சூர்யா மற்றும் ஜுனைஸ் வி.பி. ஜிண்டோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி.எஸ் படத்துக்கு இசையமைக்கின்றனர்.
விரைவில் இந்த படம் ரிலீஸாக தயாராகும் நிலையில் மலையாளத்தில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜோஜு ஜார்ஜ், அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் கலந்து கொண்டனர். அப்போது ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “இவரை முதன் முதலாக பார்த்ததுமே இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு இவர்தான் சரியானவர் என முடிவு செய்து விட்டேன். ஆனால் இவர் எப்படி சவால்களை எதிர்கொண்டு நடிக்கப் போகிறார் என்கிற சந்தேகம் இருந்தது.
ஆனால் அதற்கு முன்பாக இவரை வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குனரை சந்தித்தபோது, அபிநயாவுக்கு ஆங்கிலத்தில் வசனங்களை எழுதி கொடுத்தால் பிரமாதமாக நடித்து விடுவார் என்று கூறினார். படப்பிடிப்பில் அதை அனுபவபூர்வமாக பார்க்க முடிந்தது. அதேபோல நடனத்தில் என்ன செய்யப் போகிறார் என்று நினைத்தேன் அதிலும் அசத்தி விட்டார்” என்று அபிநயாவை பாராட்டி உள்ளார்.




