ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் இதில் கலந்து கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் ரத்த பரிசோதனை நடத்தினர்.
அதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிசிபி காவல்துறை ஆயத்தமாகி உள்ளது. நடிகை ஹேமாவிற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், அவரைக் காப்பாற்ற ஆந்திர, தெலுங்கானாவில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகள் சிசிபி-க்கு நெருக்கடி கொடுப்பதாக கன்னட இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் வரும் நாட்களில் இன்னும் அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என கன்னடத் திரையுலக வட்டாரங்களிலும் பேசிக் கொள்கிறார்கள்.