அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள் : பார்வதிக்கு இயக்குநர்கள் வேண்டுகோள் | ராணுவ படத்துக்காக சரத்குமாருடன் கைகோர்த்த மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் | தர்ஷனுக்கு உதவி செய்த நபர் கைது : விஷயம் கேள்விப்பட்ட தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணம் | நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு | சல்மான் கான் - அட்லி புதிய கூட்டணி? | இந்த வாரம்… 'டல்' ஆன வாரம்… | 'கண்ணப்பா' - தெலுங்கு தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த ப்ரீத்தி முகுந்தன் | ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் நோட்டீஸ் | கல்கி 2898 ஏடி - கமல்ஹாசன் நடித்தும் கண்டுகொள்ளாத வினியோகஸ்தர்கள் | தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் சிலை திறப்பு விழா : பி.சுசீலா, நாசர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு |
பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் இதில் கலந்து கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் ரத்த பரிசோதனை நடத்தினர்.
அதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிசிபி காவல்துறை ஆயத்தமாகி உள்ளது. நடிகை ஹேமாவிற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், அவரைக் காப்பாற்ற ஆந்திர, தெலுங்கானாவில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகள் சிசிபி-க்கு நெருக்கடி கொடுப்பதாக கன்னட இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் வரும் நாட்களில் இன்னும் அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என கன்னடத் திரையுலக வட்டாரங்களிலும் பேசிக் கொள்கிறார்கள்.