வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் |
மலையாள திரையுலகில் 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதை அடுத்து மீண்டும் மோகன்லாலை வைத்து, அவருடன் இணைந்து நடித்த ‛ப்ரோ டாடி' என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் இயக்கினார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்' படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிரித்விராஜ் கூறும்போது ஒரு ஆச்சரியமான தகவலை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, “படப்பிடிப்பில் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது ஜாலியாக ஜோக் அடித்து சிரிப்போம். என்னை அவர் மோனே (மகனே) என்று தான் அழைத்து பேசுவார். ஆனால் ஷாட் ரெடி என கூறியதும் அவர் எழுந்து விட்டால் அதன் பிறகு என்னை சார் என்று மட்டும் தான் அழைப்பார். என் தந்தை மீது அவர் வைத்துள்ள நட்பின் உரிமையில் என்னை அவர் நடத்தும் விதமும் அதேசமயம் ஒரு இயக்குனராக அவர் எனக்கு அளிக்கும் மரியாதையும் என ஒரே நேரத்தில் இருவிதமாக என்னை ஆச்சரியப்படுத்துகிறார் லாலேட்டன் (மோகன்லால்)” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.