ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மலையாள திரையுலகில் 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதை அடுத்து மீண்டும் மோகன்லாலை வைத்து, அவருடன் இணைந்து நடித்த ‛ப்ரோ டாடி' என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் இயக்கினார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்' படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிரித்விராஜ் கூறும்போது ஒரு ஆச்சரியமான தகவலை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, “படப்பிடிப்பில் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது ஜாலியாக ஜோக் அடித்து சிரிப்போம். என்னை அவர் மோனே (மகனே) என்று தான் அழைத்து பேசுவார். ஆனால் ஷாட் ரெடி என கூறியதும் அவர் எழுந்து விட்டால் அதன் பிறகு என்னை சார் என்று மட்டும் தான் அழைப்பார். என் தந்தை மீது அவர் வைத்துள்ள நட்பின் உரிமையில் என்னை அவர் நடத்தும் விதமும் அதேசமயம் ஒரு இயக்குனராக அவர் எனக்கு அளிக்கும் மரியாதையும் என ஒரே நேரத்தில் இருவிதமாக என்னை ஆச்சரியப்படுத்துகிறார் லாலேட்டன் (மோகன்லால்)” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.




