ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் இதில் கலந்து கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் ரத்த பரிசோதனை நடத்தினர்.
அதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிசிபி காவல்துறை ஆயத்தமாகி உள்ளது. நடிகை ஹேமாவிற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், அவரைக் காப்பாற்ற ஆந்திர, தெலுங்கானாவில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகள் சிசிபி-க்கு நெருக்கடி கொடுப்பதாக கன்னட இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் வரும் நாட்களில் இன்னும் அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என கன்னடத் திரையுலக வட்டாரங்களிலும் பேசிக் கொள்கிறார்கள்.