விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் இதில் கலந்து கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் ரத்த பரிசோதனை நடத்தினர்.
அதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிசிபி காவல்துறை ஆயத்தமாகி உள்ளது. நடிகை ஹேமாவிற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், அவரைக் காப்பாற்ற ஆந்திர, தெலுங்கானாவில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகள் சிசிபி-க்கு நெருக்கடி கொடுப்பதாக கன்னட இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் வரும் நாட்களில் இன்னும் அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என கன்னடத் திரையுலக வட்டாரங்களிலும் பேசிக் கொள்கிறார்கள்.