'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல பின்னணி பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கி சுதித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தர். பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
ஏற்கெனவே 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, திடீரென கடந்த சில நாட்களாக பல யு டியூப் சேனல்களுக்கு பரபரப்பு பேட்டி கொடுத்து வந்தார். இதில் பல முன்னணி நடிகர்கள் பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் 'ஓரின சேர்க்கையாளர்' என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சுசித்ராவிடம், 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “சுசித்ராவின் பேட்டி, சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. என்னைப்பற்றியும், என்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக்குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.