தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் பேச்சு | 'கங்குவா' அறிவிப்பும் வந்தது…'தங்கலான்' எப்போது? | ‛காட் பிளஸ் யூ மாமே...' : ‛குட் பேட் அக்லி' இரண்டாவது போஸ்டர் வெளியீடு | மீண்டும் அனிமல் பட இயக்குனர் உடன் இணையும் ராஷ்மிகா | சூர்யா நடிக்க இருந்த 'கர்ணா' டிராப்பா ? | தாமதமாகும் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில் | கமல் Vs ரஜினி, விஜய் Vs அஜித் : ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகள் | வருகிற கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் பேபி ஜான் | உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது : கமல் குறித்து ஷங்கர் பெருமிதம் | சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய கே.பி.ஒய்.பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தைப் போலவே தெலுங்குத் திரையுலகமும் இந்த ஆண்டில் இதுவரையில் வசூல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்காவது ஒரே ஒரு 'அரண்மனை 4' படம் கிடைத்தது. ஆனால், தெலுங்கில் அப்படி ஒரு படம் கூட அமையவில்லை. இருந்தாலும் 'கல்கி 2898 எடி, புஷ்பா 2, தேவரா' என சில பெரிய படங்கள் அங்கு வர இருப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இருந்தாலும் இனிமேல் அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் ஆகியவற்றை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெலுங்கானா தியேட்டர்காரர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த திடீர் முடிவு தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. நடிகர்களுக்கும் ஒரு ஓபனிங் கிடைக்கக் காரணமாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர்காரர்களின் முடிவு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிகாலை காட்சிகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. காலை 9 மணிக்கு மேல்தான் இங்கு காட்சிகள் நடைபெறுகிறது.