22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதி, 'வேவ்ஸ்' என்ற ஓ.டி.டி., தளத்தை துவக்கி உள்ளது.
பெருநகரம் முதல் குக்கிராமங்கள் வரை, அனைத்து தரப்பு மக்களும், தரமான ஓ.டி.டி., சேவையை பெறும் வகையில், 'பாரத்நெட்' நிறுவனத்துடன் இணைந்து, 'வேவ்ஸ்' ஓ.டி.டி., சேவையை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
கோவா தலைநகர் பணஜியில் நேற்று முன்தினம் துவங்கிய, 55வது சர்வதேச திரைப்பட விழாவில், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், 'வேவ்ஸ்' ஓ.டி.டி., சேவையை துவக்கி வைத்தார். ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், வங்காளம், மராத்தி, கன்னடா, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உட்பட 12 மொழிகளில், 10க்கும் மேற்பட்ட வகையான நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளன.
பொழுதுபோக்கு, விளையாட்டு, வானொலி சேவை, நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என, 65க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்களின் சேவைகளும் வழங்கப்படும். தொழில்நுட்ப உதவி யுடன் இணைய வழி வணிகத்திற்கு, 'வேவ்ஸ்' ஓ.டி.டி., பாலமாக அமைய உள்ளது.