சிறையில் இருந்து வந்தபின் முதன்முறையாக குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடிய தர்ஷன் | மலையாளத்தில் நரி வேட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சேரன் | படத்தின் நீளம் குறித்த பாலாவின் பேச்சுக்கு வரவேற்பு : விமர்சனத்திற்கு ஆளான ஷங்கரின் பதில் | பாலகிருஷ்ணாவுடன் நடனம் : கிண்டலடித்த ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுட்டேலா பதிலடி | ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர் | ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள் | தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த இவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். 2018ல் துபாய் ஓட்டலில் குளியல் அறையில் தவறி விழுந்ததில் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.
ஸ்ரீதேவி தன்னை அழகாக காண்பிக்க எவ்வளவு தூரம் மெனக்கெட்டார் என்பதை அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛ஸ்ரீதேவி எப்போதும் தனது தோற்றத்தில் கவனமாக இருந்தார். தன்னை அழகாக காண்பிக்க கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டார். சில சமயங்களில் தான் விரும்பிய தோற்றத்தை கொண்டு வர சாப்பிடாமல் கூட இருப்பார். இதனால் அவரது உடல்நிலை கூட பாதித்தது. அவரின் செயல் கவலை அளிக்கும் விதமாகவும் இருக்கும். என்னை திருமணம் செய்த காலத்தில் அவருக்கு லோ பிபி இருந்தது. இதனால் சாப்பாட்டை உப்பில்லாமல் எடுத்துக் கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டால் அவரின் உடல்நல போராட்டம் அதிகரித்தது. ஒரு சமயம் படப்பிடிப்பில் தளத்தில் ஸ்ரீதேவி மேற்கொண்ட உணவு கட்டுப்பாட்டால் மயங்கி விழுந்ததாக நாகார்ஜூனா என்னிடம் ஒருமுறை கூறினார்'' என்றார்.