நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படம் நாளை மறுதினம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 2000 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவ்வளவு கோடி வசூலிக்க வேண்டும் என்றால் அதற்குரிய தியேட்டர்களில் படம் வெளியாக வேண்டும்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் கூட தியேட்டர்கள் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனால், ஆன்லைன் முன்பதிவும் முழு வீச்சில் ஆரம்பமாகவில்லை. சென்னையைப் பெறுத்தவரையில் 8 தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் வினியோகஸ்தர் தரப்பில் கேட்கப்படும் சதவீதத் தொகையைத் தர தியேட்டர்காரர்கள் சம்மதிக்கவில்லை என்று தகவல். அதனால், ஒப்பந்தம் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறதாம். ஏற்கெனவே சொன்னபடி பல தியேட்டர்களில் 'அமரன்' படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம். முக்கியமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம்.
கடந்த வாரத்திலேயே முடித்திருக்க வேண்டிய ஒப்பந்த வேலைகளை இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே என திரையுலகிலேயே சிலர் ஆச்சரியப்படுவதாகத் தகவல்.