20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சுந்தர். சி இயக்கி நடித்து திரைக்கு வந்துள்ள படம் அரண்மனை 4. அவருடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் திரைக்கு வந்து 10 நாட்களில் 55 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இன்னும் கூட்டம் குறையாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுப்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை-4 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி வெளியிட்டுள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் சுந்தர். சி. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.