என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

அரண்மனை 4 படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதேபோல் தெலுங்கிலும் ஒடேலா-2 படத்திற்கு பிறகு புதிய படங்கள் இல்லாத நிலையில் தற்போது ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவன் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நான் நடித்தபோது எந்த படமும் என்னை பேச வைக்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் நடித்த பத்ரிநாத் என்ற படத்தில் நடித்த பிறகு எனது நடனத்தை பார்த்து பல இயக்குனர்களும் சிறப்பு பாடல்களில் நடனமாட எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடனமாடிய பாடல்கள் தான் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளன. அதனால் தொடர்ந்து சிறப்பு பாடல்களில் நடனம் ஆடுவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.