'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ நடித்த ‛காந்தா' படம் பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்டது. அவரின் வெற்றி, தோல்வியை பேசுகிறது. அதை படக்குழு சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது என்று செய்திகள் வந்தன. ஆனால், அது தவறான செய்தி என்று கூறப்படுகிறது. நேற்று பல இடங்களில் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. அதை பார்த்தவர்கள் படத்தின் கதைக்கும் தியாகராஜ பாகதவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கதைப்படி, சமுத்திரக்கனி இயக்குனர், துல்கர் ஹீரோ, புதுமுக ஹீரோயின் பாக்யஸ்ரீயால் ஒரு பிரச்னை வருகிறது. அது என்ன? இயக்குனர், ஹீரோ ஈகோ பிரச்னை எதில் போய் முடிகிறது என்பது கதை. 1950களில் கதை நடக்கிறது. இந்த படத்துக்கும் எந்த உண்மை கதைக்கும் சம்பந்தம் இல்லை. படம் பார்த்தவர்கள் துல்கர் நடிப்பை புகழ்கிறார்கள். நாளை படம் வெளியானபின் ரசிகர்கள் கருத்து, வரவேற்பு தெரிய வரும். துல்கர் இதற்கு முன்பு நடித்த ப்ரீயட் படமான சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் காந்தாவும் சேருமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.