விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, நானே வருவேன் என பல படங்களை இயக்கிய செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், ராயன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஏற்கனவே தான் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். மேலும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் செல்வராகவன், தற்போதும் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛ஐயோ இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே. இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒருபோதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும். இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.