பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற தரமான படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். சமீபகாலமாக அவர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே, நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த வில்லை.
சில ஆண்டுகளாக செல்வராகவன் தமிழ் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழை தொடர்ந்து தெலுங்கு படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார். இயக்குனர் கோபிசந்த் மாலினேனி, நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ். எஸ். தமன் இசையமைக்கிறார்.