தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற தரமான படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். சமீபகாலமாக அவர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே, நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த வில்லை.
சில ஆண்டுகளாக செல்வராகவன் தமிழ் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழை தொடர்ந்து தெலுங்கு படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார். இயக்குனர் கோபிசந்த் மாலினேனி, நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ். எஸ். தமன் இசையமைக்கிறார்.