காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லியோ' படம் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தை வெளியிடுவதற்கு முதல் நாள் வரையிலும் சில முக்கிய தியேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
80 சதவீதம், 20 சதவீதம் என டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் படத்தை வெளியிட வினியோகஸ்தர்கள் தரப்பில் நிர்பந்திக்கப்பட்டதே அதற்குக் காரணமாக இருந்தது. சிலர் மட்டுமே அப்படியெல்லாம் படத்தை வெளியிட முடியாது என நிராகரித்துவிட்டனர். ஆனால், பலரும் அப்படியான சதவீதத்திற்கு உட்பட்டு படத்தை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் படம் வெளியான பின் இதற்குரிய தீர்வை எட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிலர் படத்தை வெளியிட்டார்கள் என்கிறார்கள்.
எனவே, இது குறித்து மேலும் விவாதிக்க நாளை(அக்., 26) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 60 சதவீதம் 40 சதவீதம் என்ற நிலையில்தான் படத்தை வெளியிடுவோம் என தியேட்டர்காரர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இந்த விவகாரம் குறித்து நாளை முடிவு எட்டப்படவில்லை என்றால் 'லியோ' பங்கு பிரிப்பில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது.




