அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகி, இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பர்களில் ஒருவராக அவரது வலதுகரமாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு துணை நடிகை தற்கொலையில் இவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்து இரண்டாவது பாகத்திலும் நடித்து வந்தார்.
கேசவா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஜெகதீஷுக்கு முன்பாகவே நாங்கள் நினைத்து வைத்திருந்தது நடிகர் சுகாஸ் என்பவரை தான் என புதிய தகவல் ஒன்றை தற்போது கூறியுள்ளார் இயக்குனர் சுகுமார். வளர்ந்து வரும் இளம் நடிகரான சுகாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரசன்ன வதனம் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுகுமார், அங்கே பேசும்போது இந்த தகவலை கூறினார்.
மேலும், “சுகாஸின் வளர்ச்சியை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். அடுத்த நானி என்று அவரை தாராளமாக சொல்லலாம். அது மட்டுமல்ல அல்லு அர்ஜுனுக்கும் சுகாஸை ரொம்பவே பிடிக்கும். கேசவா கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்றுதான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அப்போதுதான் அவர் சில படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி நடிக்க துவங்கியிருந்தார். இந்த சமயத்தில் இப்படி வேறு துணை கதாபாத்திரத்திற்காக அவரை அழைத்து நடிக்க வைத்தால் அது தவறான முடிவாக போய்விடும் என்பதால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ஜெகதீஷை ஒப்பந்தம் செய்தோம்” என்று கூறியுள்ளார்.