அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் இன்னொரு பக்கம் ஜனசேனா என்கிற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தற்போது 2024 பார்லிமென்ட் தேர்தல் ஆறுகட்டங்களாக நடைபெறும் நிலையில் ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் மே 13 இல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள பீதாப்புரம் என்கிற சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் பவன் கல்யாண்.
இதற்காக சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பவன் கல்யாண் அப்போது தன்னிடம் 164.53 கோடி சொத்துக்கள் உள்ளதாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இதில் 118.3 6 கோடி அசையா சொத்துக்களாகவும் 46.17 கோடி அசையும் சொத்துக்களாகவும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 14 கோடி மதிப்பிலான 11 விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.