எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீகுமார், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஆவார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் நுழைய அதிக முயற்சிகளை எடுத்த ஸ்ரீகுமார் சினிமாவில் தனது சாதியால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், 'பல இடங்களில் என் சாதியை வைத்து தாழ்த்தி பேசுவார்கள். ஒரு படத்தில் நடிக்க சென்ற போது என்னுடைய பேச்சை வைத்து இவன் அந்த ஆளுதானே என்று சொன்னார்கள். அருகில் இருந்தவரும் ஆமாம், வேறு வழியில்லாமல் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என்று கூறினார். திறமையை வைத்து இல்லாமல் சாதியை பார்த்து வாய்ப்பு தருகிறார்கள். இப்போதும் சினிமாத்துறையில் சாதி பிரச்னை இருக்கத்தான் செய்கிறது' என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.