ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் | அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம் | சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி | நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி | சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும் | 'சர்வம் மாயா' வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்' | டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண் | ராம்சரண் படத்தால் இயக்குனர் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது : ராஜமவுலி ஆருடம் | ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்ட சில காட்சிகள் ராஜா சாப் படத்தில் சேர்ப்பு | காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி |

ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியவர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. அதை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் என்கிற படத்திலும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை குறித்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர் ரஹ்மானை மேஸ்ட்ரோ என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை மேதைகளை மேஸ்ட்ரோ என்று குறிப்பிடுவது சரிதான் என்றாலும் ரசிகர்களை பொருத்தவரை, ஏன் இந்திய அளவில் மேஸ்ட்ரோ என்றால் அது இளையராஜா ஒருவரை மட்டுமே குறிக்கும். இந்த விஷயம் தெரிந்தும் ரசூல் கூட்டி இவ்வாறு குறிப்பிட்டது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இசை ரசிகர்கள் பலரும் கலவையாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.