மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியவர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. அதை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் என்கிற படத்திலும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை குறித்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர் ரஹ்மானை மேஸ்ட்ரோ என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை மேதைகளை மேஸ்ட்ரோ என்று குறிப்பிடுவது சரிதான் என்றாலும் ரசிகர்களை பொருத்தவரை, ஏன் இந்திய அளவில் மேஸ்ட்ரோ என்றால் அது இளையராஜா ஒருவரை மட்டுமே குறிக்கும். இந்த விஷயம் தெரிந்தும் ரசூல் கூட்டி இவ்வாறு குறிப்பிட்டது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இசை ரசிகர்கள் பலரும் கலவையாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.