பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |
காதிர்ஸ் எண்ட்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரித்துள்ள படம் 'ஆத்மா'. ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். நாயகியாக 'தில்லுக்கு துட்டு 2' புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஆடிசம் பாதித்த இளைஞராக முதன் முறையாக நரேன் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: 'கைதி' படத்திற்கு பிறகு எனக்கு போலீஸ் கேரக்டர்கள்தான் அதிகமாக வந்தது. 10 படங்களுக்கு மேல் நிராகரித்து விட்டேன். பல படங்களில் நடித்தாலும் எனது நடிப்பு திறமையை நிரூபிக்கிற ஒரு கேரக்டர் அமையவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதை போக்கும் வகையில் அமைந்த படம்தான் ஆத்மா. எனது கேரியரில் இது முக்கியமான படம்.
இந்த கதையை கேட்டவுடன் என்னால் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக வந்த சில ஆங்கில படங்கள், கமல் நடித்த 'சிப்பிக்குள் முத்து' படங்களை பார்த்து நடிக்கும் தைரியம் வந்தது. ஆடிசம் பாதித்தவர்களை சந்தித்து அவர்களது குரல்மொழி, உடல் மொழியை கற்றுக் கொண்டேன். பொதுவாக ஆடிசம் பாதித்தவர்கள் குழந்தைகளாக, சிறுவர்களாக இருப்பார்கள். ஆடிசம் பாதித்த இளைஞர்களை பார்ப்பது அரிது. அதனால் அந்த பயிற்சி பெற மிகவும் சிரமப்பட்டேன். 2 வருடங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி, 12 கிலோ வரை எடை கூட்டி நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் எனக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்கிறார்கள். அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் போதும். என்கிறார் நரேன்.