மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித் : ‛பிரேக்கிங் நியூஸ்' தந்த நரேன் கார்த்திகேயன் | இனி தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி: இளையராஜா தகவல் | லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி | ''2வது திருமணம் செய்யவில்லை; பொய் சொன்னேன்'' - சுசித்ரா 'ஓபன் டாக்' | ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ? | அக்டோபர் 27ல் முதல் மாநில மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கட்டுப்பாடு!! | மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நரேன் | சூர்யாவை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? | டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தாங்க : அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் |
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கார், பைக் ரேஸ், போட்டோகிராபி, சிறிய ரக டிரோன் உருவாக்கம், துப்பாக்கி சுடுதல் என பலவற்றிலும் ஆர்வம் மிக்கவர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாயில் கார் ரேஸ் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அங்குள்ள கார் ரேஸ் கிளப்பில் உயர் ரக கார்களில் அவர் சீறி பாயும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவர் 2025ல் மோடோ ஜிபி எனப்படும் கார் ரேஸில் களமிறங்க உள்ளார்.
இதுபற்றிய தகவலை கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் பிரேக்கிங் நியூஸ் என குறிப்பிட்டு வெளியிட்ட பதிவில், ‛‛2025ம் ஆண்டுக்கான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஜிடி ரேஸிங் பிரிவில் எனது நண்பர் அஜித் களமிறங்க கடுமையாக உழைத்து வருகிறார். நிஜமாகவே அவர் ஒரு ஜாம்பவான் தான். அற்புதமான நடிகர் மற்றும் கார் ரேஸர். அவருக்கு அதிகமான கார் பந்தய அனுபவங்கள் இல்லை. இருந்தாலும் 2010ல் FIA F2ல் அவர் பங்கேற்று கார் ஓட்டியது எனக்கு நினைவில் உள்ளது. அவரின் திறமைகளுக்கு எல்லை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு அற்புதமான மனிதர். குட் லக் தல. உங்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்து உங்களை மீண்டும் பந்தயத்தில் ஈடுபடுத்த முடிந்தால் அது ஒரு பாக்கியமாக இருக்கும்'' என பதிவிட்டுள்ளார்.