புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அவ்வப்போது இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்திய அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நிகழ்த்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். இந்த நிலையில் கடந்த செப்.,14ம் தேதி கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் 'இளையராஜாவின் இசை விருந்து' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற இளையராஜாவின் நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக லேசான மழை, விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் மழை கொட்டியது. ஆனாலும், ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை உற்சாகமாக ரசித்தனர். இதனை பாராட்டிய இளையராஜா, இனி எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது; நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.