2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அவ்வப்போது இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்திய அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நிகழ்த்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். இந்த நிலையில் கடந்த செப்.,14ம் தேதி கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் 'இளையராஜாவின் இசை விருந்து' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற இளையராஜாவின் நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக லேசான மழை, விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் மழை கொட்டியது. ஆனாலும், ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை உற்சாகமாக ரசித்தனர். இதனை பாராட்டிய இளையராஜா, இனி எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது; நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.