பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அவ்வப்போது இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்திய அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நிகழ்த்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். இந்த நிலையில் கடந்த செப்.,14ம் தேதி கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் 'இளையராஜாவின் இசை விருந்து' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற இளையராஜாவின் நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக லேசான மழை, விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் மழை கொட்டியது. ஆனாலும், ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை உற்சாகமாக ரசித்தனர். இதனை பாராட்டிய இளையராஜா, இனி எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது; நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.