சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அவ்வப்போது இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்திய அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நிகழ்த்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். இந்த நிலையில் கடந்த செப்.,14ம் தேதி கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் 'இளையராஜாவின் இசை விருந்து' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற இளையராஜாவின் நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக லேசான மழை, விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் மழை கொட்டியது. ஆனாலும், ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை உற்சாகமாக ரசித்தனர். இதனை பாராட்டிய இளையராஜா, இனி எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது; நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.